Monday 19 November, 2012

துணங்கைக்கூத்து - தினமணி

10/08/2012 திங்கள் அன்று தினமணி மதுரை பதிப்பின் 10ம் பக்கம் நூல் அரங்கம் பகுதியில்
துணங்கைக் கூத்து (சிறுகதைத் தொகுப்பு) கந்தகப்பூக்கள் ஸ்ரீபதி. பக். 126, ரூ. 90, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிமிடெட், சென்னை 98. 044 2635 9906.

சமூகம் சார்ந்த அக்கறையுடன் வாழ்வின் முகவரிகளாக விளங்குகின்றன இத்தொகுப்பில் உள்ள கதைகள். உலகைப் பாழடித்துக் கொண்டிருக்கும் பணம், அதனால் சுருங்கிப் போன உள்ளங்கள் என ஆதங
்கப்படுகிறார் நூலாசிரியர்.

வெளிநாட்டு வேலை என்ற மாய வலைக்குப் பின்னே உள்ள கொத்தடிமைத் தன்மைகள், முதியோர் வாழ்வின் தனிமைச் சிக்கல்களை அழகாக படம்பிடித்துக் காட்டியுள்ளார்,

மூன்று வேளை சோறு, உடுத்துவதற்குத் துணி, இருப்பதற்கு வீடு, பிள்ளைகளுக்குப் படிப்பு, வயதானவர்களுக்கு மருத்துவ வசதி இவைதான் எதார்த்தமான மனிதக் கனவு என்பது இந்நூலில் எடுத்துக் கூறப்படுகிறது, சமூகத்தின் மனசாட்சியாக நின்று இதனைப் பதிவு செய்திருக்கிறார் நூலாசிரியர்.

நம் கண்முன் விரியும் சமூக அவலங்கள், அத்துமீறல்கள், போதாமைகள் மீதான படைப்பாளியின் எதிர்வினையாக இக்கதைகள் விளங்குகின்றன எனலாம்.

No comments: