Friday 25 April, 2008

தலையங்கம்

வணக்கம்.

மிகப் பெரிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் உங்களை சந்திக்கிறோம். இனி இதுபோல் இடைவெளி இல்லாமல் வெளியிட முயற்சிப்போம் என எப்போதும் போல் இப்போதும் கூறிக் கொள்கிறோம்,

இந்த முறை கவிஞர் பாண்டூ அவர்கள் எங்களோடு கைகோர்த்து இணைந்துள்ளார். இந்த மூவர் கூட்டணி முத்தாய்ப்பாய் பற்பல காரியங்கள் செய்ய வகைசெய்யும் என நம்புகிறோம்.

2001 டிசம்பரில் தொடங்கப்பட்ட கந்தகப்பூக்கள் சிற்றிதழ் விளம்பரங்கள் இன்றி சந்தா இன்றி இயங்கி வந்தது. 2005 செப்டம்பரில் மிகப் பெரிய சிறப்பிதழாக 3000 பிரதிகள் பல வண்ணத்தில் பல பக்கங்களில் அச்சிடப்பட்டு இலவசமாக சிவகாசி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கொடுக்கப்பட்டது. அதன் பிறகு இப்போது மீண்டும் புத்துணர்ச்சியுடன் களம் இறங்கியுள்ளது.

சமீபத்தில் ஆசிய பசுபிக் பொருளாதார மற்றும் சமூக சேவைகள் அமைப்பு அதன் 2008 ஆம் ஆண்டுக்கான அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் நீண்ட கால மற்றும் குறுகிய கால அடிப்படையில் இலங்கை வறிய நாடாக மாற்றம் பெற்று வருகின்றது என்றும். இந்தியா. பங்களாதேஷ், ரஷ்யா போன்ற நாடுகளும் வறுமையான நாடுகளாக மாற்றம் பெற்று வருகின்றன என்றும் தெரிவித்துள்ளது. மேலும் இதற்கான காரணத்தையும் தெரிவித்துள்ளது. அஃதென்னவெனில் 60 சதவீத தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கும் விவசாயத்துறையை புறக்கணித்து வருவதுதான் என்கிறது. இனியாவது அரசு விவசாயத்தை அதிக கவனத்துடன் பாதுகாக்க வேண்டும்.

நன்றி. மீண்டும் சந்திப்போம்.

No comments: