நித்தம் சிரிக்கும்
அழகான பூஞ்செடியே...
நாளை சருகாகும்
பூவொன்றைத் தருவாயா?
உன்னைக் கிள்ளுவது
என்தனது எண்ணமல்ல...
ஓரிடத்திலேயே உனதருமை
உறைந்திடாது இருக்கவே
உனைநான் சூடிக்கொண்டு
உலாவரும் வரம் கேட்கிறேன்!
என்னினும் அழகான
சின்னஞ்சிறு பெண்பூவே...
உடனே சூடிக்கொள்
கிள்ளுவதற்கு கலங்காதே!
அலங்கரிப்பதாய் எண்ணிக்கொண்டு
பெரிய கத்திரியால் புண்ணாக்கும்
மீசைக்காரன் வரும் முன்னே
என்கனவை நிறைவு செய்!!
கந்தகப்பூக்கள் ஸ்ரீபதி
98435 77110
Saturday 9 August, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment